இயேசுவை அடக்கம் செய்த துணி ஆய்வில் புதிய முடிவுகள்
ஆய்வின் முடிவில், இந்த துணி கி.மு.280க்கும் கி.பி.220க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முந்திய ஆய்வில் பயன்படுத்தப்பட்ட துணியின் பகுதி, கிழிசலை சரி செய்வதற்காக தைத்த ஒட்டுத் துணியாக இருந்திருக்க வேண்டுமென இந்த ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் ஜூலியோ கூறினார்.
மேலும், துணியில் பதிந்திருப்பது மனித ரத்தம் என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், திடீரென ஏற்பட்ட மின்னல் போன்ற ஒளியால் இந்த ரத்தம் துணியில் படிந்திருக்க வேண்டுமென்றும் பேராசிரியர் பவோலோ தெரிவித்தார்.
இது எப்படி நிகழ்ந்தது என்பதை தங்களால் விளக்க முடியவில்லை எனவும் ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுபற்றி கருத்து தெரிவித்த கிறிஸ்தவ அறிஞர்கள், தூரின் நகரில் உள்ளது இயேசுவின் உடல் அடக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட துணி என்பது உறுதியாகி விட்டது. இயேசுவின் உயிர்ப்பின் போது, உருவான பேரொளியே இந்த துணியில் அவரது உருவத்தை பதியச் செய்திருக்க வேண்டுமென்று கூறினர்.